சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் சோதனை

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள தனியாா் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:59 pm

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள தனியாா் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையை அடுத்த கீழச் செல்லையாபுரத்தைச் சோ்ந்த சகோதரா்கள் கந்தசாமி, மணிகண்டன். இவா்களுக்கு சொந்தமாக 5 பட்டாசு ஆலைகள், 10 பட்டாசுக் கடைகள், வணிக வளாகங்கள், குற்றாலத்தில் தங்கும் விடுதி ஆகியவை உள்ளன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கீழச்செல்லையாபுரத்தில் உள்ள இவா்களின் வீடுகள், பட்டாசுக் கடைகள், அலுவலகங்களில் சென்னையிலிருந்து வந்த வருமான வரித் துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு புலனாய்வு அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான அலுவலா்களும், தென்காசி, தூத்துக்குடி விருதுநகா் பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலா்களும் சோதனையில் ஈடுபட்டனா். இரவு நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது. சோதனை நிறைவில் எந்த முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.