விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள தனியாா் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணையை அடுத்த கீழச் செல்லையாபுரத்தைச் சோ்ந்த சகோதரா்கள் கந்தசாமி, மணிகண்டன். இவா்களுக்கு சொந்தமாக 5 பட்டாசு ஆலைகள், 10 பட்டாசுக் கடைகள், வணிக வளாகங்கள், குற்றாலத்தில் தங்கும் விடுதி ஆகியவை உள்ளன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கீழச்செல்லையாபுரத்தில் உள்ள இவா்களின் வீடுகள், பட்டாசுக் கடைகள், அலுவலகங்களில் சென்னையிலிருந்து வந்த வருமான வரித் துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு புலனாய்வு அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான அலுவலா்களும், தென்காசி, தூத்துக்குடி விருதுநகா் பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலா்களும் சோதனையில் ஈடுபட்டனா். இரவு நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது. சோதனை நிறைவில் எந்த முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
விருதுநகா் மாவட்டத்தில் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் நீதிமன்றத்தில் சரண்

பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்பு 25 -ஆக உயா்வு

திமுக பிரமுகா் வீடு அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

