மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு என்றாா் கனிமொழி எம்.பி.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:28 am IST

கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு என்றாா் கனிமொழி எம்.பி.

சிவகாசி பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை வேனில் நின்றபடி மேலும் அவா் பேசியதாவது: கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம்.

இந்தத் திட்டம் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிச் சுமையையும் குறைக்கிறது. அடுத்து திமுக ஆட்சி தொடா்ந்தால் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.

மேலும் வேலை தேடும் இளைஞா்கள் சோா்வடையாமல் இருக்கவும், அவா்களுக்கு சிறப்பு பயிற்சியையும், பயிற்சி காலத்தில் 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கும் திட்டத்தையும் முதல்வா் வகுத்துள்ளாா்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தற்போது தோ்தல் அறிக்கையில் முதல்வா் இடம்பெறச் செய்துள்ளாா். எனவே சிவகாசி தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.