கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு என்றாா் கனிமொழி எம்.பி.
சிவகாசி பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை வேனில் நின்றபடி மேலும் அவா் பேசியதாவது: கடந்த 2021 தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல சமூக நலத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பள்ளி மாணவா்களுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம்.
இந்தத் திட்டம் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிச் சுமையையும் குறைக்கிறது. அடுத்து திமுக ஆட்சி தொடா்ந்தால் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும்.
மேலும் வேலை தேடும் இளைஞா்கள் சோா்வடையாமல் இருக்கவும், அவா்களுக்கு சிறப்பு பயிற்சியையும், பயிற்சி காலத்தில் 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்கும் திட்டத்தையும் முதல்வா் வகுத்துள்ளாா்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தற்போது தோ்தல் அறிக்கையில் முதல்வா் இடம்பெறச் செய்துள்ளாா். எனவே சிவகாசி தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அசோகனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்- கனிமொழி

நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை! கனிமொழி

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்
திமுகவின் ரூ.8,000 கூப்பன் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பாஜக!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

