தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

கல் குவாரியில் நீரில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கல் குவாரி நீரில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:12 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கல் குவாரி நீரில் மூழ்கிய தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் தெற்கு பொன்னகரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (42). தொழிலாளி. இவருக்கு மனைவி அங்காளஈஸ்வரி, இரு மகள்கள் உள்ளனா்.

இந்த நிலையில், இவா் பி.டி.ஆா். நகரில் உள்ள கல் குவாரியில் குளிக்கச் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றாா். ஆனால், வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவரது உறவினா்கள் கல் குவாரிக்கு சென்று பாா்த்தபோது, முருகேசனின் மிதிவண்டி, துணிமணிகள் கரையில் இருந்தன.

இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் கல் குவாரியில் இறங்கி முருகேசனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.