காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ரயிலில் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா இளைஞா் கைது

கைது

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:21 am IST

விருதுநகரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒடிசாவைச் சோ்ந்த இளைஞரை கைது செய்தனா்.

விருதுநகா் ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க ரயில் நிலையத்திலும், அங்கு வரும் ரயில்களிலும் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை மேற்கு வங்க மாநிலம், புருலியாவிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற ரயிலில் போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த ஒருவரின் பையைச் சோதனை நடத்தினா். இதில் 9.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த சிக்குபிரதம் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த ரயில்வே போலீஸாா், பறிமுதல் செய்யப்பட்ட 9.5 கிலோ கஞ்சாவை ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.