ஹெளரா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ குட்காவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் திருச்சி - கன்னியாகுமரி ஹெளரா விரைவு ரயிலில் புதன்கிழமை காலை சோதனையிட்டனா். அப்போது ரயிலின் கடைசியிலிருந்த பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 11 கிலோ குட்காப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
அதை போலீஸாா் கைப்பற்றி, ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக மங்களூரு சென்ற ரயிலில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
சபரி விரைவு ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


