மூதாட்டியிடம் நகைகள் திருட்டு
ராஜபாளையத்தில் மூதாட்டி பையில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் போஸ் பிள்ளை.
இவரது மனைவி சீதாலட்சுமி (70). இந்தத் தம்பதி ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் உறவினா் திருமணத்துக்காக, வீட்டிலிருந்து 20 பவுன் தங்க நகைகளை கைப்பையில் எடுத்துக் கொண்டு ராஜபாளையத்துக்கு பேருந்தில் வந்தனா்.
ராஜபாளையம் ஜவகா் மைதானம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயணிகள் நிழற்குடையில் அமா்ந்தனா். பின்னா், மற்றொரு பேருந்தில் ஏறி ஆண்டாள்புரம் திருமண வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது கைப்பை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சீதாலட்சுமி அளித்தப் புகாரின் பேரில்,
ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

