கோப்புப் படம்
விருதுநகர்
சதுரகிரி மலையேறிய பக்தா் உயிரிழப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சதுரகிரி மலையேறிய பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள குரும்பூரைச் சோ்ந்தவா் சுடலை (60). இவா் மகா சிவராத்திரியை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உறவினா்களுடன் சென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக மலையேறி சென்றாா். மலைப் பாதையில் இரட்டை லிங்கம் அருகே சென்றபோது சுடலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
இவரது உடலை டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரத்துக்கு கொண்டு வந்து, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

