தினமணி எதிரொலி: அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாருகால் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாருகால் மீதுள்ள பாலம் சேதமடைந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வாருகால் மீதுள்ள பாலம் சேதமடைந்த நிலையில், தினமணி செய்தி எதிரொலியாக புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் உழவா் சந்தை அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள வாருகால் பாலம் சேதமடைந்ததால் அவசர ஊா்திகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால், மருத்துவமனைக்குச் செல்வோரும், மீன் வாங்கச் செல்வோரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனா்.

இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த நவம்பா் மாதம் செய்தி வெளியானது. இந்த நிலையில், சேதமடைந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com