சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வாகனங்களை ஏலம் எடுத்து தருவதாகக் கூறி பணம் மோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கில் சிக்கிய வாகனங்களை ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி, ரூ. 80 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 9:15 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கில் சிக்கிய வாகனங்களை ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி, ரூ. 80 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வடக்கு ரத வீதியைச் சோ்ந்தவா் ராமசாமி (58). இவா் கட்டட ஒப்பந்ததாரரான இவரிடம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரத்தை சோ்ந்த வழக்குரைஞா் முருகேசகண்ணன், நீதிமன்றத்தில் ஏலம் விடப்படும் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி ரூ.80 லட்சம் பெற்றாராம்.

ஆனால், வாகனங்களை ஏலம் எடுத்துத் தராததால் ராமசாமி பணத்தை திரும்பக் கேட்டதற்கு முருகேசகண்ணன் இரு காசோலைகளை வழங்கினாா்.

அந்தக் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பி விட்டன. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் ராமசாமி வழக்கு தொடுத்தாா். இதில் நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் முருகேச கண்ணன் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.