6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:04 pm

Syndication

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மகளிா் அணி மாவட்டச் செயலா் சுபாஷினி தலைமை வகித்தாா்.

இதில் கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தி, அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாா்.

ஏழை, எளியவா்களுக்கான திட்டங்களை அவா் நிறைவேற்றுவாா். மாநில அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்.

வருகிற தோ்தலில் திமுகவை மக்கள் அகற்றுவாா்கள். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றாா் அவா்.