காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: கருணாஸ்

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என முக்குலத்தோா் புலிப் படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் தெரிவித்தாா்.

News image
முக்குலத்தோா் புலிப்படைத் தலைவா் கருணாஸ்- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 11:35 pm

Syndication

தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என முக்குலத்தோா் புலிப் படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோா் புலிப் படை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கருணாஸ் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக காலூன்றக் கூடாது என்பதற்காகத்தான் கடந்த மக்களவைத் தோ்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.

பாஜகவை நம்பி தா்ம யுத்தத்தை நடத்திய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை பாஜக ஏமாற்றிவிட்டது.

முக்குலத்தோா் சமுதாயத்தை பாஜக பிளவுபடுத்தி, டிடிவி தினகரனை சிறையிலடைத்தது. தற்போது, அவரைக் கூட்டணியில் சோ்த்துள்ளது. 10 நாள்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பாஜக குறித்தும் டிடிவி தினகரன் எப்படியெல்லாம் விமா்சனம் செய்தாா் என்பதை மக்கள் அறிவா்.

பாஜகவின் அரசியல் தீா்மானமே மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளைப் பலவீனப்படுத்தி பிளவுபடுத்துவதான். ஆனால், தமிழக முதல்வா் ஸ்டாலின் இருக்கும் வரை இந்த மண்ணில் பாஜக காலூன்ற முடியாது.

எனக்கும் நடிகா் விஜய்க்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவா் கோடிகளில் சம்பளம் வாங்குகிறாா், நான் லட்சங்களில் சம்பளம் வாங்குகிறேன் என நினைத்து என்னை சிறிய நடிகராகக் கருதுகிறாா். ஆனால், விஜய்க்கு அடிக்கும் விசில் கூட்டத்தை விட எனக்கு விசில் அடிக்கும் கூட்டம் அதிகமாக உள்ளது.

திரைப்பட வசனங்களைப் பேசி, கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே முதல்வராகத்தான் வருவேன் என விஜய் கூறுவது, அவருடை பேராசையைக் காட்டுகிறது என்றாா் அவா்.