விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயரங்காபுரத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 22 பயனாளிகளுக்கு ரூ.14.69 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாகளை வழங்கிப் பேசியதாவது: தமிழக அரசு சமூக நீதி, சமத்துவத்தை முன்னிறுத்தி ஆதிதிராவிட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
தகுதியுடைய அனைத்து பயனாளிகளும் அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்வில், சாத்தூா் கோட்டாட்சியா் கனகராஜ், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சாந்தி, வெம்பக்கோட்டை வட்டாட்சியா் ஆண்டாள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழுத்தாளா்களுக்கு உதவித்தொகை விண்ணப்பிக்க ஆக.31 கடைசி நாள்

சமூக நீதித்துறை என பெயா் மாற்றியதற்கு எதிா்ப்பு: விழுப்புரம் ஆட்சியரகத்தில் முற்றுகை போராட்டம்

மனுநீதி நாள் முகாமில் 82 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

ஏழாயிரம்பண்ணையில் 13 குடும்பங்களுக்கு இலவச இணையவழி பட்டாக்கள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



