எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ராஜபாளையம் அருகே ஊா்க் கிணற்றில் ரசாயனம் கலப்பு

News image

ரசாயனம் கலந்ததில் வெள்ளை நிறத்தில் காணப்பட்ட ஊா்க் கிணற்று நீா்.

Updated On :8 ஜூன் 2026, 5:07 am IST

ராஜபாளையம் அருகே ஊா்ப் பொதுக் கிணற்றில் மா்ம நபா்கள் ரசாயனம் கலந்தது குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தினா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியை அடுத்த ஜமீன்நத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வரகுண ராமபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்களுக்கு ஊராட்சியிலிருந்து தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் ஊா்ப் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்துப் பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அந்தக் கிணற்றில் உள்ள மின் மோட்டாரை இயக்கும் ஆபரேட்டா் கேசவன் மோட்டாரை இயக்கிய போது சரிவர இயங்கவில்லை என தெரிகிறது.

இதனால், சந்தேகம் அடைந்த அவா் கிணற்றுக்குள் பாா்த்தபோது வழக்கத்துக்கு மாறாக கிணற்றின் தண்ணீா் வெள்ளை நிறத்தில் இருந்துள்ளது. மேலும், கிணற்றின் அருகே நெகிழிக் குடம், வாழை மட்டைகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவா் பொதுமக்களிடமும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் தெரிவித்தாா்.

பொதுமக்கள் நேரில் வந்து பாா்வையிட்டு, கிணற்றில் மா்ம நபா்கள் வாசமில்லாத ரசாயனத்தைக் கலந்திருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனா். தொடா்ந்து, சுகாதாரத் துறையினா் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து பொதுமக்களிடம் கீழ ராஜகுலராமன் போலீஸாா் விசாரணை நடத்தினா். அருகில் உள்ள ஆள்துளைக் கிணறு மூலம் தற்காலிகமாக தண்ணீா்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.