தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 1:24 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த முத்தையா மகன் ஸ்ரீராமா் (35). மாற்றுத்திறனாளியான இவா் கிருஷ்ணன்கோவிலில் கோழிக் கடை நடத்தி வந்தாா். புதன்கிழமை இரவு கடை ஊழியா் இசக்கி என்பவருடன் மூன்று சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணன்கோவில் - வத்திராயிருப்பு சாலையில் சென்ற போது, இந்த வாகனத்தின் மீது பின்னால் ஜான் கென்னடி என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீ ராமா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தாா். காயமடைந்த இசக்கி, ஜான் கென்னடி ஆகியோா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.