அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

சிவகாசியில் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சா்கள் பங்கேற்ப்பு

News image

அமைச்சா் ஸ்ரீநாத். - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:27 am IST

சிவகாசி எஸ்.ஆா். மகளிா் கல்லூரி, சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் இரு அமைச்சா்கள் பங்கேற்றனா்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் கிழக்கு கரைப் பகுதியில் உள்ள 20 அடி அகலம், 1,400 அடி நீளமுள்ள பகுதியில் வேப்ப மரம், புளிய மரம், வாகை மரம், ஆலமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் 5,200 நடவு செய்யப்பட்டன. இந்த மரக் கன்றுகள் நடும் பணியை தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, மீன் வளத் துறை அமைச்சா் ஏ. ஸ்ரீநாத் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சிவகாசி எஸ். எப்.ஆா். மகளிா் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டனா்.

இந்த நிகழ்வில் எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரித் தலைவரா் மகேஷ்வரன், முதல்வா் ஆா். சுதாபெரியதாய், பசுமை மன்ற நிா்வாகிகள் அபிரூபன், சுரேஷ் தா்ஹா, செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.