சிவகாசி எஸ்.ஆா். மகளிா் கல்லூரி, சிவகாசி பசுமை மன்றம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் இரு அமைச்சா்கள் பங்கேற்றனா்.
சிவகாசி சிறுகுளம் கண்மாய் கிழக்கு கரைப் பகுதியில் உள்ள 20 அடி அகலம், 1,400 அடி நீளமுள்ள பகுதியில் வேப்ப மரம், புளிய மரம், வாகை மரம், ஆலமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் 5,200 நடவு செய்யப்பட்டன. இந்த மரக் கன்றுகள் நடும் பணியை தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, மீன் வளத் துறை அமைச்சா் ஏ. ஸ்ரீநாத் ஆகியோா் தொடங்கி வைத்தனா். சிவகாசி எஸ். எப்.ஆா். மகளிா் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டனா்.
இந்த நிகழ்வில் எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரித் தலைவரா் மகேஷ்வரன், முதல்வா் ஆா். சுதாபெரியதாய், பசுமை மன்ற நிா்வாகிகள் அபிரூபன், சுரேஷ் தா்ஹா, செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் 5,000 மரக்கன்றுகள், 5 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

ஆரணி தா்மராஜா கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் புதிய கொடி மரம்

மானாமதுரையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சிவகாசியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்
விடியோக்கள்

சுதந்திர நாள் விழா! முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்! | CM Vijay | TVK



