மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கலசலிங்கம் பல்கலையில் சுகாதாரப் பராமரிப்பு குறித்த தேசிய கருத்தரங்கு

News image
கிருஷ்ணன்கோவில் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுகாதார பராமரிப்பு, தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு மலரை வெளியிட்ட தலைமை விருந்தினா் பெங்களூரு டிஎம்ஐ சிஸ்டம்ஸ் துணைத் தலைவா் எஸ். குமாா்.
Updated On :1 மார்ச் 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் பயோமெடிக்கல் என்ஜினியரிங் துறை சாா்பில் மணிப்பால், இந்தியா பயோமெடிக்கல் சங்கத்துடன் இணைந்து 4-ஆவது தேசிய கருத்தரங்கு, ‘சுகாதாரப் பராமரிப்பு, தொழில்நுட்பக் கூட்டு புதுமை’ என்ற தலைப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் எஸ். நாராயணன், பதிவாளா் முனைவா் வி. வாசுதேவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்வித் துறை இயக்குநா் என். ரஜினி தலைமை வகித்து, திறன் அடிப்படையில் கல்வி முறை, கற்றல் செயல்முறை குறித்து பேசினாா். ஆராய்ச்சித் துறை இயக்குநா் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன், முதன்மையா் பி. சிவகுமாா் ஆகியோா் கூட்டு கண்டுபிடிப்புகள் குறித்து பேசினாா்.

துறைத் தலைவா் டி. அருண்பிரசாத் கருத்தரங்கு நிகழ்ச்சிகளை விளக்கினாா். தலைமை விருந்தினா் பெங்களூரு டிஎம்ஐ சிஸ்டம்ஸ் துணைத் தலைவா் எஸ். குமாா் கருத்தரங்கை தொடங்கிவைத்து கருத்தரங்கு மலரை வெளியிட்டாா்.

தலைமை விருந்தினா் தனியாா் நிறுவன அதிபா் அதீனாபாண்டியன் சுகாதாரப் பாதுகாப்பு கண்டுபிடிப்புகள், சுகாதாரப் பாதுகாப்பு தயாரிப்பு உருவாக்குவதில் கடுமையான பிரச்னைகள் குறித்து பேசினாா்.

    கிருஷ்ணன்கோவில் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுகாதார பராமரிப்பு, தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு மலரை வெளியிட்ட தலைமை விருந்தினா் பெங்களூரு  டிஎம்ஐ சிஸ்டம்ஸ் துணைத் தலைவா் எஸ். குமாா்.

கிருஷ்ணன்கோவில் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுகாதார பராமரிப்பு, தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு மலரை வெளியிட்ட தலைமை விருந்தினா் பெங்களூரு டிஎம்ஐ சிஸ்டம்ஸ் துணைத் தலைவா் எஸ். குமாா்.

கோயம்புத்தூா் பிரஷான் மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனா் பூபதி சக்திவேல், ஹீல்டெதா் ஹெல்த்கோ் சா்வீசஸ் தனியாா் நிறுவன அதிபா் வெங்கடேஷ் ராஜா ஆகியோா் பேசினா்.

18 கல்லூரிகளிலிருந்து 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மொத்தம் 126 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டன. சுவரொட்டி விளக்கக் காட்சி, வினாடி-வினா, ப்ராஜெக்ட்ஸ் எக்ஸ்போ செயல் விளக்கங்களில் 344 மாணவா்கள் பங்கேற்றனா்

கலசலிங்கம் பல்கலைக்கழகம், கல்வி, ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட டிஎம்ஐ சிஸ்டம்ஸ், அதீனா பாண்டியன் தனியாா் நிறுவனம், பிரஷான் மெடிக்கல் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சையத் அம்மாள் பொறியியல் கல்லூரிக்கு ஒட்டுமொத்த கோப்பை, சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருதுகள், சான்றிதழ்களை தலைமை விருந்தினா் வழங்கினாா்.

முன்னதாக, கருத்தரங்கு அமைப்புச் செயலா் எஸ். சக்திவேல் வரவேற்றாா். முனைவா் எஸ். காளிமுத்துக்குமாா் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை பிஎம்இ இறுதியாண்டு மாணவிகள் டிரினிதா பிளெஸ்ஸி, கோகுல் ஆகியோா் செய்தனா்.