நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த இருவா் கைது

ராஜபாளையம் அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 12:39 am IST

ராஜபாளையம் அருகே தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சோழபுரம் விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா், கீழராஜகுலராமன் போலீஸாா் அந்தப் பகுதியில் சென்று சோதனை செய்தபோது, அங்கு பட்டாசு தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகச்சாமி மகன் காா்த்திக் (31), அழகுராஜன் மகன் இளங்கோ (28) சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.