சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்தனா்.
சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் கண்மாயில் மணல் அளிக் கொண்டிருந்த இருவா், பொக்லையன் இயந்திரம், டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.
பிறகு போலீஸாா் டிராக்டா் உள்ளிட்டவற்றை காவல் நிலையம் கொண்டு வந்தனா். விசாரணையில் மணல் அள்ளியது ஆலமரத்துப்பட்டி வெள்ளைத்துரை (43), செவல்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (29) எனத் தெரியவந்தது.
இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா்.
தொடர்புடையது

ஆடு திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

காா் ஓட்டுநா் அடித்துக்கொலை: இருவா் கைது
மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
மணல் திருட்டு: 2 டிராக்டா்கள் பறிமுதல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

