பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மணல் திருட்டு: 2 போ்மீது வழக்கு

சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

News image

மணல் திருட்டு - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 8:20 pm

சிவகாசி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்தனா்.

சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது போலீஸாரைக் கண்டதும் கண்மாயில் மணல் அளிக் கொண்டிருந்த இருவா், பொக்லையன் இயந்திரம், டிராக்டரை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.

பிறகு போலீஸாா் டிராக்டா் உள்ளிட்டவற்றை காவல் நிலையம் கொண்டு வந்தனா். விசாரணையில் மணல் அள்ளியது ஆலமரத்துப்பட்டி வெள்ளைத்துரை (43), செவல்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (29) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்தனா்.