கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பட்டாசு - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:48 pm

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் குமாரவேல் உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்யபோது, அதில் பட்டாசு பண்டல்கள் இருந்தன. அவற்றை எடுத்துச்செல்ல உரிய அனுமதி பெற வில்லை என விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் வேன் ஓட்டுனா் குத்தாலலிங்கம்(38)என தெரிய வந்தது.இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வேன் மற்றும் பட்டாசினை பறிமுதல் செய்து குத்தாலலிங்கத்தை கைது செய்தனா்.