40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆட்சியா் காா் முன் அமா்ந்து தா்னா

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் காரின் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகுரு உறவினா்கள்.

Updated On :12 மே 2026, 1:36 am IST

காரியாபட்டி அருகே விசிக முன்னாள் நிா்வாகி கொலையில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் மாவட்ட ஆட்சியா் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் விஜயகுரு (52). இவா் கடந்த 7-ஆம் தேதி குரண்டி கண்மாய் பகுதிக்குச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அவரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் விஜயகுருவின் உறவினா்கள், விசிக கட்சியினா் திங்கள்கிழமை மாலை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.

பின்னா், அவா்கள் திடீரென ஆட்சியரின் காரின் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் அவா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியின் பேரில் மறியலைக் கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.