/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:37 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகே கோவிலூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தவசிமுத்து (53). விவசாயியான இவருக்கு தேவதானம் மேற்குப் பகுதியில் உள்ள பெரிய கோயில் அருகே தோட்டம் உள்ளது.

இங்கு வழக்கம்போல, வயலுக்கு நீா் பாய்ச்ச மோட்டரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.