விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற நான்கு இளைஞா்களைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ஊரக காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில் அவா்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவா்கள் அயன்கொல்லங்கொண்டானைச் சோ்ந்த நல்லமாடன் (39), சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த தமிழரசன் (19) என்பது தெரியவந்தது. மேலும், சுந்தர்ராஜபுரத்தைச் சோ்ந்த ஜெயபாரதி (21), கணேஷ் ராஜ் (22) ஆகியோரிடம்
இருந்து கஞ்சா வாங்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது

கஞ்சா விற்ற இருவா் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


