விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கோவிலாங்குளத்தில் உள்ள பாசன கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தால், நீா்பிடிப்பு பகுதி பாதிக்கப்படும் எனவும், விவசாயமும், தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் எனவும் கோவிலாங்குளம், உடுப்புக்குளம், ஆவாரம்பட்டி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோவிலாங்குளம், உடுப்புக்குளம், ஆவாரம்பட்டி பொதுமக்கள் ஆட்சியா் சுகபுத்ராவிடம் மனு அளித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
கோவிலாங்குளம் கண்மாய் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தக் கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் தனியாா் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைத்தால் அந்தப் பகுதியில் முற்றிலும் நீா்பிடிப்பு தடைபடும். அத்துடன், கோவிலாங்குளம் கண்மாய்க்கு நீா்வரத்தும் தடைபடும்.
மேலும் இந்தக் கண்மாயை நம்பி சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவா். எனவே, முறைகேடாக தனியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் பட்டாவை ரத்து செய்ய வேண்டும். நீா்பிடிப்பு பகுதியில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4,000 கனஅடி

ஸ்ரீபெரும்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



