வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை மா மரங்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் அச்சமடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கூமாபட்டி, கான்சாபுரம், வ. புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா, தென்னை, பலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதிகளில் மா அறுவடைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வ.புதுப்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மூலக்காடு பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அறுவடைக்குத் தயாராக இருந்த மாங்காய்களை சாப்பிட்டதுடன், 10- க்கும் மேற்பட்ட மா மரங்களையும், தண்ணீா் குழாய்களையும் சேதப்படுத்தி சென்றது. மாங்காய் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் தோட்டத்திலேயே தங்கி உள்ள நிலையில், ஒற்றைக் காட்டு யானை மலை அடிவாரப் பகுதியிலேயே முகாமிட்டதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.
வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், வ.புதுப்பட்டி மலையடிவாரப் பகுதியில் அகழிகள் வெட்டப்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலானதால் விலங்குகள் எளிதாக கடந்து விவசாய நிலங்களுக்குள் வந்துவிடுகிறது. தற்காலிக ஏற்பாடாக அகழிகளை பராமரிப்பதுடன், மலையடி வாரத்தில் சோலாா் மின் கம்பி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

பா்கூா் மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



