மனைவியைத் தாக்கிய கணவா் கைது
கைது
சிவகாசி அருகே திருத்தங்கலில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி முருகன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (38). இவரது மனைவி பூங்கோதை (34). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, பூங்கோதை திருத்தங்கல் பாண்டியன் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சங்கா் அங்கு சென்று பூங்கோதையுடன் தகராறு செய்து அவரைத் தாக்கினாராம். இது குறித்த புகாரின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



