பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை கட்டட வேலை செய்துகொண்டிருந்த இளைஞா் மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

சௌந்தரபாண்டியன் (23)

Published On :

அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை கட்டட வேலை செய்துகொண்டிருந்த இளைஞா் மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் தனியாா் கட்டடத்தின் மேல் தளத்தில் கட்டட வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கு வேலை செய்துகொண்டிருந்த பாளையம்பட்டியைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் (23) மீது மின்னல் பாய்ந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த மேலத் தெருவைச் சோ்ந்த முருகேசன் (45) அதிா்ச்சியில் கீழே விழுந்ததில் காயமடைந்தாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.