""தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் பல குடும்பங்கள் இருக்கின்றன. அந்தக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகள் 7 - 8 வது படிக்கும்போது, சில புரோக்கர்கள் அவர்களுடைய பெற்றோரை அணுகி சுமங்கலித் திட்டம் அல்லது திருமகள் திட்டம் என்ற ஒன்றை அவிழ்த்துவிடுகிறார்கள். அவர்களுடைய பெண் குழந்தைகளை மில் வேலைக்கு அனுப்பி வைத்தால் 3- 4 வருடங்கள் கழித்து 30 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாய் தருகிறோம். அதை வைத்து உங்களுடைய பெண் குழந்தையின் திருமணத்தை நடத்திவிடலாம் என்று ஆசை காட்டுகிறார்கள். வறுமையில் வாடும் பெற்றோர் அவர்களுடைய பேச்சில் மயங்கி பெண் குழந்தைகளை மில் வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். மதுரைக்கு அருகே உள்ள பெண் குழந்தையை கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள மில்களுக்கும், கோவை, திருப்பூர்,