""முன்பெல்லாம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்றால் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் என்றுதான் நினைத்திருந்தோம். இப்போது சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்தும் நிறைய வேலைவாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. உலகம் முழுக்க பிபிஓ, கால் சென்டர் பணிகள் பெருகியுள்ளன. உலகின் கவனம் முழுக்க சீனா, இந்தியா ஆகிய இருநாடுகளில் மீது குவிந்திருக்கின்றன. சீனாவை உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு என்று ஒதுக்கிவிட்டார்கள். அதனால் சேவைத்துறைப் பணிகளுக்கான வாய்ப்புகள் எல்லாம் நம்மைத் தேடி வருகின்றன. எனவே கம்ப்யூட்டரில் அதிலும் மென்பொருள் துறையில் நிறைய வாய்ப்புகள் நமது நாட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றன'' என்ற அவரிடம், ஒபாமா அதிபராக வந்தவுடன்,அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கப் போவதாக அறிவித்தார். இதனால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வரும் வேலைவாய்ப்புகள் குறையும் என்ற அச்சம் ஏற்பட்டது. அமெரிக்காவில் வரவிருக்கிற தேர்தலில் போட்டியிடும் மிட் ரோமனேயும் தற்போதுஅமெரிக்காவில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பாதிப்பு ஏற்படாதா? என்று கேட்டோம்.