கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை சவேரா ஓட்டலில் காலை 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமானது. எனது குழுவில் 45 பேர் இருந்தனர். அவர்களை 3 குழுக்களாகப் பிரித்தேன். காய்கறிகளை வெட்ட 15 பேர், அசைவ உணவு வகைகளை வெட்ட 15 பேர் இதர வேலைகளைப் பார்க்க 15 பேர் எனப் பிரித்தேன். இந்தச் சமையல் சாதனைப் போட்டியில் 230 கிலோ மீன், எறால், நண்டு போன்ற கடல்சார் உணவு வகைகளையும், சிக்கன் 60 கிலோவும், மட்டன் 20 கிலோவும், வேறு சமையல் பொருட்கள் 140 கிலோவும் பயன்படுத்தப்பட்டன. ரவா கேசரி, ரவா கிச்சடியுடன் ஆரம்பித்தேன். மொத்தம் 24 மணி நேரம் 30 நிமிடம் 12 விநாடிகள் சமைத்தேன். 617 உணவு வகைகளைச் சமைத்தேன். மொத்தம் 190 கிலோ உணவு தயாரானது. இந்தப் போட்டியில் முக்கியமான நிபந்தனை, சமைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சாப்பிடும்படியாக இருக்க வேண்டும் என்பதே. ஆனால் நான் சமைக்கச் சமைக்க அங்குள்ள அனைவரும் உடனே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டார்கள்'' என்று சிரிப்புடன் சொன்ன அவரிடம், அவ்வளவு நேரம் தொடர்ந்து சமையல் செய்யும்போது களைப்பாகிவிடவில்லையா? என்றோம்.