பாடல்கள், இசை, தீவிரமான கருத்து (அது இல்லாவிட்டால்) மனதை வருடும் நிகழ்வுகள் போன்ற அனைத்தையும் ஒருமுகப்படுத்தி தென்னிந்திய ரசிகர்களுக்கு "மிஸ்ஸியம்மா' கொடுத்த விருந்து வேறு எந்த நிறுவனமும் அதுவரை கொடுக்காத ஒரு படைப்பு. இப்படம், சந்தையில் காணாமல் போகும் ஒரு பெண்ணின் கதையுடன் துவங்குகிறது. அதேசமயம், கிராமத்தில் ஜமீன்தார் பெயரில் பள்ளி விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரத்தை ஒரு வேலையில்லாத பட்டதாரி பார்த்துவிடுகிறான். அதேசமயம் டேவிட் என்பவரிடம் கடன்பெற்ற மேரி என்ற கிறிஸ்துவ பெண்ணிடம், அந்த பட்டதாரி நாம் இருவரும் கணவன் மனைவியாக நடித்து விளம்பரம் செய்யப்பட்ட பள்ளியில் பணிக்கு அமரலாம் என்று கூறுகிறான். அந்த பெண் தயங்குகிறாள், ஆனால் டேவிட் அவளைத் தொடர்ந்து வற்புறுத்துவதால் அவள் அந்த ஆலோசனையை ஏற்கிறாள்.