ரத யாத்திரையின் வயது பல நூற்றாண்டுகள் என்றாலும், பாரம்பரியமாகத் தேர் உருவாக்கும் வழிமுறை மாறவே இல்லை. "" இந்த ஆண்டு ரத யாத்திரை மிகச் சிறப்பானது. ஏனென்றால், நவகளேபரா எனப்படும் புதிய மரச் சிற்பங்களைத் தயாரித்திருக்கிறோம். முன்பெல்லாம், தேர்களின் சில பாகங்களை மறுபடி பயன்படுத்த வைத்திருப்போம். மீதி பாகங்களை பக்தர்களுக்கு விற்றுவிடுவோம். இந்த ஆண்டு இந்தத் தேர்களை, எந்தப் பழைய பாகங்களும் சேர்க்காமல், முற்றிலும் புதிதாக உருவாக்கினோம். ஏனென்றால், பழைய சிலைகளோடு சேர்த்து, பழைய தேர்களின் சில பாகங்களையும் புரி ஜகந்நாதர் கோயிலுக்குள், பிரம்ம பாவர்த்தன் சடங்குக்குப் பின்னர் புதைத்துவிட்டோம்'' என்கிறார் கிருஷ்ணா.