ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இன்னா செய்யாமை!

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களை காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :31 மே 2015, 9:14 am

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்க்கு எதிரான கறுப்புச் சட்டங்களை காந்தியடிகள் கொளுத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவர் செருப்புத் தைத்தார். முதல் இணைச் செருப்பே சிறப்பாக அமைந்தது. அதனை யாருக்காவது அன்பளிப்பாக அளிக்க விரும்பினார். அவர் நினைவிற்கு வந்த முதல் மனிதர் ஸ்மட்ஸ்.

அவர் காந்தியடிகளைச் சிறையிலடைத்த ஆளுநர். சிறையிலிருந்து விடுதலையானதும் ஸ்மட்ûஸ சந்தித்துத் தான் தைத்த காலணிகளை வழங்கினார். அதற்குப் பதிலாக ஸ்மட்ஸ், காந்திக்கு விவிலியம் சார்ந்த இரு நூல்களைப் பரிசாகக் கொடுத்தார். அவற்றைப் பொன்னைப்போல் போற்றித் தம்முடனே வைத்துக் கொண்டார் காந்தியடிகள்.

1948-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முப்பதாம் நாள் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகமே இரங்கல் செய்தி விடுத்தது. ஸ்மட்ஸ் தம்முடைய இரங்கல் செய்தியில், ""காந்தி சிறையில் தாமே தயாரித்த காலணியை, எனக்கு அன்பளிப்பாக அளித்தார். அதனை ஆர்வத்தோடு வாங்கி அணிந்தேன்; என் கால்கள் நடுங்கின; நிற்க முடியவில்லை. உடனே அதனை எடுத்துச் சென்று என் பூசை அறையில் வைத்து வணங்கி வருகிறேன்'' என்று குறிப்பிட்டார்.

("காந்தியம்' என்ற நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.