நாங்கள் நூறு ஆண்டுகளாகச் சண்டை போடுகிற குடும்பம். அநீதிக்கு எதிராக, உற்றார் உறவினர் என்றுகூடப் பாராமல், எங்களை அறியாமலேயே சண்டை போடுவோம். எங்கள் வீட்டுப் பெண்கள், வெளியே அநியாயமாக எதாவது நடந்தால், கதவைத் திறந்து விட்டு, சேலையில் வைத்திருக்கும் ஆயுதத்தைக் கொடுத்து அனுப்புவார்கள். தர்மத்துக்காகப் போராட வேண்டும். அதுவே லட்சியம். என் எழுத்து அநீதியை எதிர்த்துக் குரல் எழுப்புவது மாதிரி தெரிந்தால் அதுதான் காரணம். இந்தப் பின்னணியிலிருந்து வந்தவைதான் என் எல்லாக் கதைகளும்'' தன் பின்னணி குறித்துப் பேசிய கந்தசாமி, மொழி பற்றி சிந்தனையைத் தூண்டும் வகையில் சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.