

சாக்லெட்டில் சேர்க்கப்படும் கோகோவை குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியவை தாக்கும் அபாயம் 10 சதவீதம் அளவுக்குக் குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பனாமா நாட்டில் உள்ள குணா என்ற பழங்குடி மக்கள் வாரம் ஒன்றுக்கு 40 கோப்பைகள் கோகோ கலந்த ஒரு பானத்தைக் குடிப்பது வழக்கம். அவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் தாக்காமல் இருக்கின்றன. நோய்கள் தாக்கும் அபாயம் குறைந்தும் உள்ளது. இந்த குணா மக்கள் பனாமா நாட்டிலேயே நீண்ட காலம் உயிர் வாழ்வதும் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் நார்மன் ஹோலன் பெக், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் 5 நோய்களில் 4 நோய்களை குணப்படுத்தும் சக்தி படைத்ததாக கோகோ இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.