மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விக்டோரியா மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்

இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி,  தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை (பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார்.

News image
Updated On :3 ஜூலை 2022, 6:00 am IST


இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி,  தன் பேரன் ஐந்தாம் ஜார்ஜை (பிற்காலத்தில் மன்னன்) இளமையில் வெளிநாட்டில் ஒரு கப்பல் கட்டும் துறையில் பணிபுரிய அனுப்பியிருந்தார்.
பேரனுடைய செலவுக்கு அங்குக் கிடைக்கும் ஊதியம் போதாது என்று எண்ணித் தானும் ஒரு ஜம்பது பவுன் மாதம்தோறும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
""தன் செலவுக்கு  இந்தப் பணமும் போதவில்லை''  என்று 
ஐந்தாம் ஜார்ஜ்  பாட்டி விக்டோரியா மகாராணிக்கு, ""இனி நூறு பவுனாக அனுப்புங்கள்'' என்று எழுதிக் கேட்டிருந்தார்.
இதனைக் கண்டதும், மகாராணியார் சிந்தனையில் ஆழ்ந்தார்.  அதிகமாக அனுப்ப விரும்பவில்லை. அனுப்பாமல் இருக்க மனமும் ஒருப்படவில்லை. அனுப்பாவிட்டால் பேரன் வருந்துவானே என்ற கவலை ஒருபுறம். அனுப்பினால் பேரன் அதிக செலவாளியாகிக் கெட்டு விடுவானே என்ற வேதனை மற்றொருபுறம். என்செய்வோம்! இந்தக் குழப்பத்தில் அவரால் இன்னது செய்வது என்று புரியவில்லை.
பேரனை எண்ணி, கடிதம் எழுதுவார்; அதை அனுப்பாமல் கிழித்துவிடுவார். எழுதுவதும், கிழித்துப் போடுவதும் சில நாள்கள் சென்றன.
இறுதியாக,  உலகத்தையாளும் சக்கரவர்த்தினி, தன் பேரனுக்கு (வருங்கால மன்னனுக்கு) பணம் அனுப்ப மறுக்கலாமா?- என்று எண்ணிக் கடைசியாகப் பணம் அனுப்பப் போகும்போது, மனம் வரவில்லை. பணத்தையும் அனுப்பவில்லை.
பின், ஒருநாள் கடிதம்- அதில் அவன் பெருஞ்செல்வத்தில் பிறந்து வளர்ந்த குடிமகனாயினும், எப்படிச் சிக்கனமாய் இருந்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது பற்றிய விதிகளை, அதற்குரிய வழிகளை எல்லாம் நன்கு விளக்கமாக விவரித்து எழுதி- கடிதத்தை உறையிற் போட்டு அஞ்சலில் அனுப்பச் சொன்னார்.
அஞ்சலில் போட்டுவிட்டு வந்தவனை நோக்கி பதைபதைத்து- ""அஞ்சல் நிலையத்துக்குச் சென்று அந்தக் கடிதத்தைத் திரும்பி வாங்கிவா'' என்று அவனைத் திருப்பி அனுப்பினார்.
அங்கு போய் வந்த வேலையாள், ""அஞ்சல் கட்டு எடுத்தாயிற்று; போய்விட்டது'' என்று சொன்னான்.
விக்டோரியா மகாராணிக்குப் பெருங் கவலை.
""பேரன் என்ன நினைப்பானோ? என்ன செய்வானோ? எப்படிக் கஷ்டப்படுகிறானோ?''- என்ற கவலையில் அந்த வாரம் முழுவதும் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் கூட இருந்து வருந்தினார்.
பேரனிடமிருந்து பத்தாம் நாள் கடிதம் வந்தது. அதைக் கண்டதும் பேரன் என்ன எழுதியிருக்கின்றானோ எப்படி துயருகிறானோ? என்ற கவலையில் உடல் நடுங்கி, கை நடுக்கத்தோடு கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.
அதில், இந்த நான்கு, ஐந்து வரிகள்தான் இருந்தன:
""பாட்டி. இனிமேல் நீங்கள் ஐம்பது பவுனும் அனுப்ப வேண்டாம். நான் பணம் கேட்கும்போதெல்லாம் எனக்கு சிக்கன வாழ்க்கைக்கான விவர விளக்கவியல் எல்லாம் எழுதி அனுப்பிக் கொண்டே இருங்கள். அது போதும்! ""சிக்கனமாக வாழ்வது எப்படி'' எனும் கட்டுரையின் ஆசிரியர் விக்டோரியா மகாராணி என்று- இதனை ஒரு புத்தக வியாபாரிக்கு ஆயிரம் பவுனுக்கு விற்றுவிட்டேன்.''
இதனைப் பார்த்ததும், உலகத்தையாண்ட மகாராணியின் உள்ளம் எப்படி இருந்தது? எப்படி இருந்திருக்கும் ?

- (கி.ஆ.பெ. விசுவநாதம் எழுதிய அறிவுக் கதைகள் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.