போட்டித் தேர்வுகள் என்றாலே பயிற்சி வகுப்புகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்ற நிலையில், நாகப்பட்டினத்தில் போட்டித் தேர்வுகளுக்காக இலவச உண்டு, உறைவிடப் பயிற்சி மையத்தைத் திறந்து அசத்தியிருக்கிறார் முப்பத்து ஏழு வயதான இளைஞர் வி.கமல்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், கோவையில் விளையாட்டுக் கல்லூரி விடுதியில் படித்து கூடைப்பந்து வீரராக வாழ்க்கையைத் தொடங்கியவர்.
எம்.பி.ஏ. (விளையாட்டு மேலாண்மை) பட்டத்தையும் பெற்றவர்.
அதன்பின்னர், 2013இல் தமிழ்நாடு அரசின் குரூப் 1 தேர்வு எழுத சென்னைக்குச் சென்றார் கமல். அங்குள்ள தனியார் பயிற்சி மையம் மதிய உணவையும் அளித்து பயிற்சியும் தந்தது கமலைக் கவர்ந்தது. இதனால் மீனவர்கள் நிறைந்த நாகப்பட்டினத்தில் யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு 'கலங்கரை ஐ.ஏ.எஸ். அகாதெமி' என்ற பெயரில் பயிற்சி மையத்தைத் தொடங்கினார். குரூப் 2 , குரூப் 4, காவலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் இங்கு பயிற்சி பெற்ற சுமார் 30 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்தச் சாதனை குறித்து கமல் கூறியதாவது:
கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினத்தில் மீன் பிடித்தல்தான் முக்கியத் தொழில். அரசுத் துறை வாய்ப்புகள் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாத நிலையைப் போக்கவே, ஐ.ஏ.எஸ். அகாதெமியைத் தொடங்கினேன்.
உண்டு, உறைவிடப் பள்ளி போல போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி தரத் திட்டமிட்டேன். அதன் முதல் முயற்சியாக 40 பேர் தினசரி வந்து செல்பவர்களாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுதவிர 30 ஆண்கள், 30 பெண்கள் விடுதியில் தங்கவைத்து, பயிற்சி தரத் திட்டமிட்டுள்ளேன். இவர்கள் 60 பேருக்கும் 3 வேளை உணவு, தங்குமிடம், ஓராண்டுக்கான பயிற்சி முற்றிலும் இலவசம். இலவசம் என்பதால் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. மிகச் சிறந்த பயிற்றுநர்களை அழைத்து வந்து பயிற்சி தருகிறோம்.
சி.பி.சி.எல். நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் 30 மாணவர்களுக்கு ஆகும் செலவைத் தருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அன்பழகனார், தனது சங்கத்தின் வாயிலாக நல்ல ஆதரவை அளிக்கிறார். பின்தங்கிய நாகை மாவட்டத்தின் தேர்வர்களும் இனி அரசுப் பணிகளில் வாய்ப்புகளைப் பெற முடியும்.வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கும் கட்டணமில்லாமல் வகுப்பெடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
இலவசப் பயிற்சி வகுப்பை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்துத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார் கமல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


