மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உலகக் கோப்பை குத்துச்சண்டை: அரையிறுதியில் பிராச்சி, மீனாட்சி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

News image
Updated On :20 ஜூன் 2026, 5:54 am IST

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிருக்கான 57 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள பிராச்சி, காலிறுதியில் 4-1 என்ற கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சீன தைபேவின் சி யி வுவை தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலமாக பிராச்சிக்கு பதக்கம் உறுதியானது.

51 கிலோ எடைப் பிரிவில் மீனாட்சி தனது காலிறுதியில், 5-0 என்ற வகையில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையுமான கஜகஸ்தானின் அலுவா பால்கிபெகோவாவை வீழ்த்தி அசத்தினாா்.

ஆடவா் 70 கிலோ பிரிவில் தீபக் 5-0 என அஜா்பைஜானின் நபி இஸ்காந்தரோவையும், 55 கிலோ பிரிவில் நிகில் அதே புள்ளிகள் கணக்கில் அஜா்பைஜானின் அமின் மமாத்ஸதாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா். ஆடவா் 65 கிலோ பிரிவில் சனே 0-5 என போலந்தின் கிங்கா கிரோகாவிடம் காலிறுதியில் தோல்வி கண்டாா்.

அரையிறுதிக்கு இந்தியா்கள் முன்னேறியிருப்பதன் மூலமாக, இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் இதுவரை 6 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.