'என்னம்மா. ஒரு வாரமா சாப்பாடு
சரியில்லை.'
'அவருக்கும் எனக்கும் சண்டை. அதான் ஓட்டலில் வாங்குறோம்..'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'நாளைக்கு என்னைப் பெத்தவங்க வர்றாங்க?'
'அதனால் என்னங்க?'
'அவங்க எதிரில் என்னை சமைக்கச் சொல்லாதே...'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
'ஏன்டி.. வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே...'
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நம்ப சொத்து விவகாரத்தைக் கேட்டிருக்கா.. அதாங்க..'
-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.
'என்னடி... ஸ்லோகன் போட்டியில் பரிசு வந்த வாஷிங் மெஷினை ஏன் வேண்டாமுன்னு சொல்லிட்டே...'
'துவைக்க நீங்க இருக்கீங்க.. அதான் வேற வாங்கிக்கிறேங்க..'
-ப,.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்.
'அண்ணா... தோசை மாவு வாங்கப் போனா எங்க வீட்டுக்காரரை ஒரு வாரமா காணலை..'
'என்னம்மா பண்ணே..'
'உப்புமா, பூரின்னு சாப்பிட்டு சமாளிக்கிறேன்...'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-7.
'நீ ஏன் ஒரு கையில் மட்டும் வளையல் போட்டுக்கிறே..'
'எனக்கு செகன்ட் ஹேண்ட் வளையல் பிடிக்காதே..'
'இது எங்க பாட்டி காலத்துக்கு குக்கர்..'
'அப்ப நல்ல ஆவி வந்த குக்கருன்னு சொல்லு...'
-வி.சாரதி டேச்சு, சென்னை-5.
'ஏன்டா முதல் மாச சம்பளத்தை அப்பா கையில் கொடுக்காமே டேபிள் மேல வைக்கிறே...'
'இல்லம்மா.. அவருகிட்டே வாங்கின கை.
கொடுக்கக் கூடாதுல்ல.. அதான்...'
-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
'பள்ளிக்கூடத்துக்கு எதுக்கு சீப்பு கொண்டு போறே...'
'கேள்வி கேட்கும்போது தலையை சொறிய
கூடாதுன்னு மிஸ் சொன்னாங்கம்மா.. அதான்..'
-ச.அரசமதி, தேனி.
'கல்யாணத்துக்கு முந்தி யாரையாவது காதலிச்சியான்னா கேட்டா ஏன்டி பதிலே சொல்லலை..'
'இல்லைங்க... உண்மையைச் சொன்னா உங்க மனசு சங்கடப்படும். பொய் சொன்னா என் மனசு உறுத்தும்.. அதாங்க..'
'பொண்ணு கிளி மாதிரி இருந்திச்சேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...'
'அதை ஏன் வருத்தமா சொல்றே...'
'கல்யாணமாகி வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா.. எல்லா சாவிகளையும் வாங்கி இடுப்புல வச்சுக்கிட்டா...?'
'எல்லாத்துக்கும் பெண்டாட்டி பேச்சைக் கேட்டா வாழ்க்கையில் முன்னேற முடியாதுப்பா...?'
'நீங்க முன்னேற முடியாததுக்கும் அதான் காரணமாப்பா...?'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.