திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருக்குறள் செயலி!

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, திருக்குறள்களை உள்ளடக்கிய ஒரு செயலி (apps) காணக் கிடைத்தது.

News image
Updated On :21 செப்டம்பர் 2015, 3:19 pm

க.தி.மணிகண்டன்

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, திருக்குறள்களை உள்ளடக்கிய ஒரு செயலி (apps) காணக் கிடைத்தது.

தமிழின் மிகச் சிறந்த நூலாகவும், உலகப் பொது மறையாகவும் திகழும் திருக்குறளை செல்லிடப் பேசியில் செயலி வாயிலாகப் படிக்க முடியும் என்பது தொழில்நுட்பத்தின் அடுத்த வளர்ச்சி.

இந்தச் செயலியில் உள்ள அம்சங்களைக் காண்போம்.

ஆன்ட்ராய்டு இயங்கு தள மென்பொருளைக் கொண்டு இயங்கும் செல்லிடப் பேசிகளில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

இதில், 1330 குறள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயலியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் திருக்குறள் கிடைக்கின்றது.

ஒவ்வொரு குறளுக்கும் விளக்க உரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, நாம் படிக்கும் திருக்குறளை முகநூல், சுட்டுரை ஆகிய சமூக வலைத்தளங்களிலும் பகிர முடியும் என்பது மற்றொரு சிறப்பு.

உலகின் அனைத்து பகுதிகளுக்கும் திருக்குறள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.