நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்! ஒரு கேள்வி... நிறைய தகவல்கள்!

முதல்நிலைத் தேர்வினை அணுகும்முறை பற்றி நாம் தொடர்ந்து கவனித்து வருகின்றோம். பொருளாதாரம், புவியியல், வரலாறு, பயன்பாட்டு அறிவியல், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பம், கலை மற்றும் கட்டிடக்கலை, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு போன்ற அடிப்படைப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பின்புலமாக பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பதனை போட்டித் தேர்வர்களான நீங்கள் நன்கறிவீர்கள்.

News image
Updated On :11 ஏப்ரல் 2016, 2:56 pm

மு.சிபிகுமரன்

முதல்நிலைத் தேர்வினை அணுகும்முறை பற்றி நாம் தொடர்ந்து கவனித்து வருகின்றோம். பொருளாதாரம், புவியியல், வரலாறு, பயன்பாட்டு அறிவியல், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பம், கலை மற்றும் கட்டிடக்கலை, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு போன்ற அடிப்படைப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பின்புலமாக பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பதனை போட்டித் தேர்வர்களான நீங்கள் நன்கறிவீர்கள்.

முக்கியத்துவம் பெற்றுள்ள நடப்பு நிகழ்வு ஒன்றினை எடுத்துக்கொண்டு அதனைப் பன்முகப்பாங்கில், பல்வேறு கோணங்களில் குறிப்புகள் தயார்செய்வது தொடர்பாக உங்களுக்கு விளக்கமும் தரப்பட்டு வருகின்றது.

2015 ஆம் ஆண்டில் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத்தேர்வில் கேட்கப்பட்ட, செய்திகளில் அதிகம் பேசப்பட்ட உலக சுகாதாரம் தொடர்பான கேள்வி கீழே தரப்படுகின்றது.

முதல்நிலைத் தேர்வினை அணுகும்முறை பற்றி நாம் தொடர்ந்து கவனித்து வருகின்றோம். பொருளாதாரம், புவியியல், வரலாறு, பயன்பாட்டு அறிவியல், சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பம், கலை மற்றும் கட்டிடக்கலை, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு போன்ற அடிப்படைப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு பின்புலமாக பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பதனைப் போட்டித் தேர்வர்களான நீங்கள் நன்கறிவீர்கள்.

முக்கியத்துவம் பெற்றுள்ள நடப்பு நிகழ்வு ஒன்றினை எடுத்துக்கொண்டு அதனைப் பன்முகப்பாங்கில், பல்வேறு கோணங்களில் குறிப்புகள் தயார் செய்வது தொடர்பாக உங்களுக்கு விளக்கமும் தரப்பட்டு வருகின்றது.

2015ஆம் ஆண்டில் குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத்தேர்வில் கேட்கப்பட்ட, செய்திகளில் அதிகம் பேசப்பட்ட உலக சுகாதாரம் தொடர்பான கேள்வி கீழே தரப்படுகின்றது.

Among the following, which were frequently mentioned in the news for the outbreak of Ebola Virus recently?

(a) Syria and Jordan

(b) Guinea, Sierra Leone and Liberia

(c) Philippines and Papua New Guinea

(d) Jamaica, Haiti and Suriname

இக்கேள்வி கேட்கப்பட்டதற்கான பின்புலத்தினைப் பார்ப்போம்.

கடந்த 2015ஆம் ஆண்டில் எபோலோ என்ற வைரஸ் உயிர்க்கொல்லி நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன் மற்றும் லைபீரியா நாடுகளில் வாழ்ந்த மக்களில் பலரைத் தாக்கியது. உயிர்ச்சேதம் விளைவித்தது. தாக்கப்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். இறந்தவர் உடலை அப்புறப்படுத்தக்கூட ஆளில்லாத அளவுக்கும், அஞ்சும் அளவுக்கும் பிற மனிதர்கள் நெருங்க முடியாத கொடூர நோயாக விளங்கியது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது இந்த வைரஸ் நோய். இதுவே இவ்வினா கேட்கப்பட்டதற்கான பின்புலமாகும்.

மீண்டும் இதில் நாம் கவனம் செலுத்தவேண்டிய காரணம் உள்ளது. என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் கடும் போராட்டத்திற்குப் பிறகு 2015 செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டது என பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மறுபடியும் லைபீரியாவின் தலைநகர் மோன்ரோவியாவின் அருகில் உள்ள பேனெஸ்வில்லேவில் ஒரு சிறுவனுக்கு எபோலா பாதிப்பும், அறிகுறியும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன.

எனவே, இதனைப் பின்புலமாகக் கொண்டு தற்போது புவியியல்ரீதியாக வினாக்கள் அமைந்திட வாய்ப்புகள் இருப்பதாகக் கருதலாம். கினியா, சியாரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளின் எல்லைப்புற நாடுகள் பற்றியோ, இவற்றின் அருகில் அமைந்துள்ள அட்லாண்டிக் பெருங்கடல் சூழல்கள் பற்றியோ கேட்கப்படலாம்.

இந்நாடுகளின் தலைநகரங்களைக் கொடுத்து பூமத்தியரேகையிலிருந்து தெற்கிலிருந்து வடக்காக (South to North) சரியான வரிசையைத் தேர்வு செய் என்றோ, LOMA மலைகள் அமைவிடம் பற்றியோ, இந்நாடுகளில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் பற்றியோ வினாக்கள் அமைந்திட வாய்ப்புகள் உள்ளன.

அதேவேளையில் இத்துடன் சேர்த்து மேலும் இரண்டு தலைப்புகளையும் தேர்வர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். அவை ஜிகா வைரஸ் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியனவாகும்.

ஏனெனில், சமீபத்தில் செய்திகளில் பரவலாகப் பேசப்பட்டுவரும் ஆபத்தான மற்றொரு வைரஸ் நோயாக ஜிகா (ZIKA) வைரஸ் நோய் விளங்குகிறது.

2015ஆம் ஆண்டின் இறுதிக்காலங்களில் அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஜிகா வைரஸ் தாக்கியது. மேலும் 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமாக பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில் எண்ணற்ற குழந்தைகள் உடல்பாதிப்புகளுடன் பிறந்துள்ளனர். முக்கியமாக சிறிய தலையுடனும் (MICROCEPHALY), மூளை பாதிப்புடனும், தசைத்தளர்ச்சி மற்றும் நரம்பியல் பாதிப்புகளுடன் (GUILLAIN - BARRE SYNDROME) பிறந்துள்ளன. இது தொடர்பான ஆய்வினை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார நிறுவனமும் இந்த வைரஸ் பரவாமல் தடுத்திட தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக சர்வதேச சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.

இவ்வாறு உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச சுகாதார அவசரநிலைப் பிரகடனம் செய்யப்படுவது கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து இது நான்காவது முறையாகும்.

ஜிகா வைரஸ் என்பது இப்போது தோன்றியதல்ல. முதன்முதலில் 1947ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (ZIKA) என்ற காட்டில் இந்த வைரஸ், குரங்குகளைத் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், 1952 ஆம் ஆண்டு உகாண்டாவிலும், தான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. 1977 இல் பாகிஸ்தானிலும் இந்த வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. சமீப காலத்தில் பசிபிக் நாடுகளிலும் மனிதர்களைத் தாக்கியுள்ளது. மலேசியா, இந்தோனேசியா நாடுகளிலும் பாதிப்புகள் இருப்பது காணப்பட்டது.

டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைப் பரப்பிய அதே ஏடிஸ் ஏஜிப்தி (AEDES AEGYPTI) கொசுக்களே ஜிகா வைரûஸயும் பரப்புகின்றன.

இவ்வாறு இவற்றைத் தொகுக்கும் போது ரஏஞ எனப்படும் உலக சுகாதார நிறுவனம் பற்றியும் தேர்வர்கள் கீழே கண்டுள்ளவாறு முக்கியத் தகவல்களைச் சேகரிக்கலாம்.

உலக சுகாதார அமைப்பு 07.04.1948 இல் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதி ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகவும் அனுசரிக்கப்படுகின்றது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் அமைப்புகளின் ஒன்றாக இது விளங்கி வருகின்றது. ஐக்கிய நாடுகளின் முன்னோடி அமைப்பான Leaque of Nations என்கிற அமைப்பினது சுகாதார அமைப்பின் வழியில் இது தோற்றுவிக்கப்பட்டது.

இதன் நோக்கமும், செயல்பாடுகளும் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

உலக அளவில் சுகாதாரத்தினைப் பேணும் நேரடி உயர்நிலை அமைப்பாக இருத்தல், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து சிறப்பு சுகாதாரக் குழுக்களை ஏற்படுத்துதல் மற்றும் பல்வேறு அரசுகளின் வேண்டுகோளுக்குத்தக்கவாறு சுகாதாரத்தினைப் பேண உதவுதல் போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அவசரகால உதவிகளைச் செய்து தருதல், ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு ஏற்ப பகுதிவாரியாக சிறப்புக்குழுக்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் தேவையான நிர்வாக தொழில்நுட்ப உதவிகளை அளித்தல் முதலான பணிகளை மேற்கொள்கின்றது.

நோய்த்தடுப்பு முறைகளை மேம்படுத்துதல், விபத்துக்காலங்களில் சிறப்புக் குழுக்களுடன் இணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழலில் சுகாதாரத்தைப் பேணுவதற்கான காரணிகளை கவனித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றது.

சுகாதாரத்தை மேம்படுத்தி உழைக்கும் குழுக்களை ஊக்குவித்தல், சட்டங்கள், ஆலோசனைகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளையும் செயல்படுத்தி வருகின்றது.

இந்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரலாக தற்போது டாக்டர் மார்கரெட் சான் என்ற பெண்மணி இருந்து வருகின்றார்.

இவர் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர். சீனர். 2006 ஆம் ஆண்டு இப்பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக மறு நியமனம் செய்யப்பட்டு இப்பதவியில் செயல்பட்டு வருகின்றார்.

குடிமைப்பணித்தேர்வுகளில் வினாக்கள் அமைகின்ற பகுதிகளை அனுமானித்து கவனம் செலுத்துவது பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.