அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எளிதாக வங்கிக் கடன் பெற..!

அங்கிகளில் சேமிப்பு, நடப்புக் கணக்கு வழக்குகளைச் சரியாக மேற்கொண்டு, வங்கி அலுவலர்கள், ஊழியர்களிடம் நல்ல முறையில் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் எளிதாக வங்கிக் கடனைப் பெறலாம்.

News image
Updated On :9 பிப்ரவரி 2016, 12:47 pm

பாரத் தி. நந்தகுமார்

அங்கிகளில் சேமிப்பு, நடப்புக் கணக்கு வழக்குகளைச் சரியாக மேற்கொண்டு, வங்கி அலுவலர்கள், ஊழியர்களிடம் நல்ல முறையில் நட்பை ஏற்படுத்திக் கொண்டால் எளிதாக வங்கிக் கடனைப் பெறலாம்.

நல்ல வசதியான தொழில் முனைவோர்களுக்கு முதலீடு எளிதானது. ஆனால், நடுத்தர, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், முதலீடு என்பது சிரமம்தான்! வங்கியில் கடன் பெறத் தினம்தோறும் அலைய வேண்டியிருக்கிறது. வங்கியில் தொழில் தொடங்கக் கடன் கேட்பதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.

கடன் கோரி அணுகினால் வங்கி அலுவலர்கள் கேட்கும் முதல் கேள்வி "கணக்கு தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது. கணக்கு எண் சொல்லுங்கள். பார்க்கலாம்' என்பதுதான்!

எனவே, வங்கியில் கணக்குத் தொடங்கி பரிவர்த்தனை செய்யுங்கள். தொழில் முனைவோர் தொடங்க இருக்கும் தொழிலின் பெயரில் வங்கியில் கணக்கு துவங்கி, தங்களது சொந்த முதலீட்டு பங்குத் தொகையை அந்த கணக்கில் செலுத்தி தொழிலுக்கான நடவடிக்கைகளைத் தங்குத் தடையின்றித் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

அன்றாட வருவாயை வங்கியில் செலுத்தி, பணப் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும். வங்கியின் அலுவலர்களைச் சந்தித்து, தங்களது தொழில் வளர்ச்சி, மேம்பாடு, கணக்கில் இருப்பு நிலவரம் குறித்துத் தெரியப்படுத்த வேண்டும். இதுதவிர, வங்கியில் இயன்ற அளவுக்கு முதலீட்டுத் திட்டங்களில் சேமிப்பைத் தொடரலாம்.

பின்னர் கடனுதவி கோருவது நன்று. அப்போது, கடனுதவிக்கான திட்ட அறிக்கை, ஆவணங்கள், தொழில் சம்பந்தமான தகவல்கள் அளிக்கும்போது கடனுக்கு "பச்சைக் கொடி' காட்டப்படும்.

கடன் பெற்றுவிட்டு குறித்த காலத்தில் விரைவாகச் செலுத்துவது, கூடுதலாக கடன் பெறவும், மீண்டும் கடன் பெறவும் நல்ல அணுகுமுறை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.