இன்று தமிழ்நாட்டில் இருந்து உலகம் முழுவதும் வேலைவாய்ப்புக்காகச் சென்று குடியேறி வாழ்ந்து கொண்டிருப்போர் 2.5 கோடி தமிழர்கள். ஆண்டுதோறும் பல லட்சம் டாக்டர்கள், என்ஜினீயர்கள், நர்ஸ்கள், ஆசிரியர்கள், வெல்டர், டர்னர், கொத்தனார், கம்பி கட்டுவோர் என பல தொழில்நுட்பப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர்.
பலர் சட்டப்படி தேவையான வேலைவாய்ப்பு விசாவில் செல்லாமல் சுற்றுலா விசாவில் சென்று அவதிப்படுகின்றனர். பலர் திரும்பி வருகின்றனர். பலர் தருவதாகச் சொன்ன சம்பளம் கிடைக்காமல், அதிக நேரம் பணியாற்றி, குறைந்த சம்பளம் பெற்று கஷ்டப்பட்டு திரும்புகின்றனர். இந்நிலை மாற தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டு தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இன்று பல லட்சம் பேரை சட்டப்பூர்வ விஸாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ள மிகச்சிறந்த நிறுவனமாக இது விளங்குகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தமிழக இளைஞர்களை (ஆண் / பெண்) வெளிநாடுகளுக்கு அனுப்பும் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகச் செயல்படுகிறது.
பயண ஏற்பாடு, டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் பணிகளைச் செய்கிறது.
இன்சூரன்ஸ் செய்து தரும். தேவையான அன்னிய செலாவணிக்கு ஏற்பாடு செய்து உதவுகிறது. பாஸ்போர்ட் எடுப்பது, வேலைக்குச் செல்ல உதவுவது என எல்லா பணிகளையும் செய்து தருகிறது.
கம்ப்யூட்டர் உதவியோடு மிகச்சிறந்த வேலைவாய்ப்பு தகவல் வங்கி(Data Bank)யினை உருவாக்கியுள்ளது. விளம்பரம் செய்து, நேரில் பதிவு செய்தும், மாவட்டத் தலைநகர்களில் முகாம்கள் நடத்தியும் சிறந்த, நல்ல மதிப்பெண் பெற்ற, அனுபவம் மிக்கவர்களைப் பதிவு செய்கிறது.
சென்னையில் நேர்முகப் பேட்டி நடத்த ஏற்பாடு செய்கிறது. அரசுப் பணியில் இருந்தால் 5 ஆண்டு விடுமுறை பெற்றுத் தருகிறது. மருத்துவ மற்றும் உடல் பிட்னஸ் சான்றிதழ் பெற உதவுகிறது.
சௌதி அரேபியா, குவைத், U.A.E., மாலத்தீவுகள், வங்காளதேசம், சூடான், பிரான்சு, பஹ்ரைன், கனடா, மலேசியா, ஜோர்டான், ஏமன், சிங்கப்பூர், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏராளமான பணியாளர்களை அனுப்பி வருகிறது.
டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள், டிரைவர்கள், எலக்ட்ரீஷியன், பெட்ரோலியப் பணியாளர்கள், பிளாஸ்டிக் / அச்சக வல்லுநர்கள், கோவில் பணியாளர்கள், கணக்காளர்கள், ஐடிஐ படித்தோர், ஆயில் கம்பெனி பணியாளர்கள், ஆசிரியர்கள், கட்டடப் பணியாளர்கள், ஜேசிபி, கிரேன் ஆபரேட்டர், வீட்டு பணியாளர், என்ஜினீயரிங் பணியாளர்கள், விவசாய / மீன் பிடிப்பு பணியாளர்கள், குடிநீர் திட்ட ஊழியர்கள் என பல்வேறு பணிகளுக்கு வெளிநாடுகளில் ஆட்கள் தேவை. உடனே நேரில் அணுகி, பதிவு பெற்று, சட்டப்பூர்வமாக வெளிநாட்டு வேலைக்குச் சென்று பயன் பெறுங்கள்.
நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 42, ஆலந்தூர் ரோடு, மகளிர் ஐடிஐ காம்ப்ளக்ஸ், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.
தொலைபேசி : 044-2250 5886
www.omcmanpower.com, http://www.mea.gov.in/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


