கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

தொட வேண்டாம்!

கரோனா தொற்று வந்தாலும் வந்தது;  கைகளைத் தூய்மைப்படுத்தியே கைகள் தேய்ந்துவிடும்போல் இருக்கிறது.  

Published On :

கரோனா தொற்று வந்தாலும் வந்தது; கைகளைத் தூய்மைப்படுத்தியே கைகள் தேய்ந்துவிடும்போல் இருக்கிறது.
சில இடங்களில் சானிடைசர் நிரம்பி உள்ள அமைப்பை சுவரில் பொருத்தியிருப்பார்கள். அதன் மேல்பகுதியில் கைகளை வைத்து அழுத்தினால், சானிடைசர் கைகளில் வழியும். ஆனால் கைகளை அந்த அமைப்பில் வைத்து அழுத்தும்போது கைகளில் வைரஸ் இருந்தால் அதில் ஒட்டிக் கொள்ளும். பிறர் அதைத் தொடும்போது அவர் கைகளில் வைரஸ் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதற்காக கால்களில் பெடலை அழுத்தினால், கைகளில் சானிடைசர் கொட்டும்விதமான கருவிகளும் வந்துவிட்டன.
கால்கள், கைகள் எதுவும் படாமலேயே கைகளை நீட்டினால் சானிடைசர் கைகளில் வழியும் ஓர் அமைப்பை நொய்டாவில் உள்ள ரியாட் லேப்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த சானிடைசர் கருவியிலிருந்து ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைசர் வெளிவருகிறது.
இந்தக் கருவியில் அல்ட்ராசோனிக் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. கைகளில் கருவியின் அருகே கொண்டு சென்றதும் 5 - 6 மி.லி. சானிடைசர் 5 நொடிகளுக்குள் வழிகிறது. இது இரண்டு கைகளையும் தூய்மைப்படுத்தப் போதுமானதாக இருக்கிறது.
இந்தக் கருவியை நிறைய தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தக் கருவிக்கு டிஆர்டிஓ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.