எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தண்ணீரைத்  தூய்மையாக்கும் கருவி!

இயற்கை நமக்கு வழங்கிய அருஞ்செல்வம் தண்ணீர். நமது உடலில் தண்ணீர் இருக்கிறது. புவியின் 70 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2020, 12:30 am

என்.ஜே.

இயற்கை நமக்கு வழங்கிய அருஞ்செல்வம் தண்ணீர். நமது உடலில் தண்ணீர் இருக்கிறது. புவியின் 70 சதவீதம் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.

மழையாகப் பெய்கிற தண்ணீரை நாம் பயன்படுத்தி அழுக்காக்கி, சாக்கடை மூலமாக இறுதியில் கடலில் கலக்கச் செய்கிறோம். இந்த அழுக்கான தண்ணீரை இலவசமாகத் தூய்மைப்படுத்தித் தருகிறது சூரியன்.

சூரிய ஒளிக்கதிர்கள் தண்ணீரில் படும்போது அந்த தண்ணீர் சூடாகி, ஆவியாகி, மேகமாகி மீண்டும் மழையாகப் பெய்கிறது. இந்த செயலின் அடிப்படையில் தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் ஒரு கருவியை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ரோஜெஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

தண்ணீரை உறிஞ்சக் கூடிய அலுமினிய தகடைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ள இந்தக் கருவியை, நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் சிறிது மூழ்கியிருக்குமாறு செய்கிறார்கள். நீரில் மூழ்கியுள்ள இந்தக் கருவியின் பகுதியிலிருந்து நீர் உறிஞ்சப்பட்டு, கருவியின் மேற்பகுதியில் உள்ள அலுமினிய தகட்டுக்கு வருகிறது. இந்த அலுமினியத் தகட்டில் சிறு சிறு பள்ளங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளங்களுக்கு வரும் அழுக்கடைந்த தண்ணீர் சூரிய ஒளி ஆற்றலின் மூலமாக ஆவியாக்கப்படுகிறது. தண்ணீரில் உள்ள அழுக்குகள், உப்புகள் தங்கிவிடுகின்றன. நீராவி சேமிக்கப்பட்டு, குளிராக்கப்படுகிறது. தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது.

இயற்கையாக சூரிய ஒளி நீரின் மேற்பரப்பில் படும்போது பெரிய பரப்பளவில் உள்ள தண்ணீரின் மீது படுகிறது. இதனால் தண்ணீர் சூடாவதும் ஆவியாவதும் தாமதமாகிறது.

இந்தக் கருவியின் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தண்ணீர், குவிக்கப்பட்ட சூரிய ஒளியின் மூலம் வெப்பப்படுத்தப்படுவதால், மிக விரைவில் அதிக அளவிலான தண்ணீரைத் தூய்மையாக்க முடியும் என்கிறார்கள் ரோஜெஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.