அறிவியல் வளர்ச்சியால் தொழில்நுட்ப சாதனங்கள் வேகமாக மாற்றம் கண்டு வருகின்றன. அதுவும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு, புதிய சேவைகளுடன் வாரந்தோறும் புதிது புதிதாய் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான சாதாரண மொபைல் போன்களுக்கு இருந்த மவுசு, ஸ்மார்ட் போன்களின் புழக்கத்துக்குப் பிறகு பெரிய அளவிலான திரைக்கு மாற்றமாகின. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வக வடிவிலான தொடுதிரையின் வடிவில் இருந்து மடிக்கும் வகையிலான தொடுதிரைகள் என தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றன. எனினும், ஸ்மார்ட் போன்களுக்குள் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) மூலம் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும், வெளிப்புறத் தோற்றமான செவ்வக வடிவத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் "டிடோர்' வட்ட வடிவிலான ஸ்மார்ட் போனை உருவாக்கியுள்ளது. உள்ளங்கையில் அடங்கும் அளவில் உள்ள இந்த புதிய அளவிலான ஸ்மார்ட் போன் பார்ப்பதற்கு பெரிய அளவிலான கைக்கடிகாரம் போல் உள்ளது. இரண்டு சிம் கார்டுகளும், 13 மெகா பிக்சல் முன் பக்க கேமராவும் இந்த வட்டவடிவிலான போனில் உள்ளது. ஆன்ட்ராய்டு 9-இல் இயக்கப்படுகிறது. வட்ட வடிவத்திற்கு ஏற்ற ஆப்களை மாற்றம் செய்யும் பணியில் இந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.
இதில், இரண்டு ஹெட்போன்கள் புகுத்தும் இடங்கள் உள்ளன. இதன் மூலம் ஒரே திரையில் இரண்டு பேர், வீடியோக்களைக் காணலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், நண்பர்களுக்காகவும், அலுவலகத்தினருக்காகவும் தனித்தனியாக மெசேஜ், போன் புக் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களின் சர்வதேச கண்காட்சி 2020-இல் இடம் பெற்ற இந்த வட்ட வடிவிலான ஸ்மார்ட் போன் அனைவரையும் கவர்ந்தது. ஓராண்டில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அ.சர்ஃப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! எத்தனை பேர் 200க்கு 200 கட்-ஆஃப்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி?

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?

பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது நயாரா நிறுவனம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


