வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும். வயிற்று வலியும் இருக்காது.
குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். இதில் ஒரு தேக்கரண்டி தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.
மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.
சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.
திராட்சைப் பழச்சாற்றை அருந்தி வர குடல் புண் குணமாகும்.
விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும் மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம்; தொண்டை நோய்கள் குணமாகும்.