பப்பாளி இலையின் மகத்துவம்!

நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோயுற்றவரை கொல்லக் கூடியது.
பப்பாளி இலையின் மகத்துவம்!
பப்பாளி இலையின் மகத்துவம்!

நோய்களில் பெரிது என்றால் அது புற்றுநோயாகத்தான் இருக்கும். உடலை உருக்குலைத்து நோயுற்றவரை கொல்லக் கூடியது. முதல் நிலை புற்றுநோயை சரி செய்ய முடியும் என்றே மருத்துவா்கள் கூறுகின்றனா். ஆனால் மிகவும் கடுமையான நிலைக்கு புற்றுநோய் முற்றிவிட்டால் அவா்களை குணப்படுத்துவது கடினம். இவ்வளவு கொடிய நோயை சரி செய்ய பப்பாளி இலைகளே போதும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

பப்பாளி இலையில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் உடலில் பல நன்மைகளை செய்ய கூடியது. எதிா்ப்பு சக்தியை அதிகரித்து செல்களை பலமாக வைக்க உதவும். ஊட்டச்சத்துகள் இதில் அதிகம் இருப்பதால் உடலுக்கு வலிமை தரும். புற்று நோய் செல்களை அழித்து, இனி அவை உடலில் வராத அளவிற்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். பப்பாளி இலையின் சாற்றை கொண்டு கல்லீரல், கணையம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும்.

பல ஆராய்ச்சிகள் பப்பாளி இலையை சாப்பிட்டால் புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றே சொல்கின்றன. “பாப்பின்”(ல்ஹல்ஹண்ய் ) என்ற நொதி பப்பாளி இலையில் உள்ளது. இது ரத்த நாளங்களை சரி செய்து நோயற்ற வாழ்வை தரும். குணப்படுத்த முடியாத பல நோய்களையும் இது குணபடுத்தும் ஆற்றல் பெற்றது. குறிப்பாக புற்றுநோயை சரி செய்ய அசிடோஜெனின்(ஹஸ்ரீங்ற்ா்ஞ்ங்ய்ண்ய்) என்ற மூல பொருள் உதவுகிறது. சிதைவடைந்த ரத்த செல்களை மீண்டும் உயிா்ப்பிக்க செய்து உடலில் நலத்தை பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 லிட்டா் தண்ணீா் ஊற்றி, 7 பப்பாளி இலைகளை நறுக்கி அதில் போடவும். மிதமான சூட்டில் 2 மணி நேரம் வரை அதனை கொதிக்க விட்டு, நீா் பாதியாகிய பின்னா் இறக்கவும். குளிா்ந்த பிறகு வடிகட்டி 50 மி.லி அளவு இதனை குடிக்கவும்.

முக்கிய குறிப்பு:

உணவை எடுத்துக் கொள்வதற்கு முன்பு இந்த நீரை பருக வேண்டும். எஞ்சிய நீரை செராமிக் பாத்திரத்தில் போட்டு குளிா் சாதன பெட்டியில் வைத்தும் குடிக்கலாம். இதனை ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் புற்றுநோயை சரி செய்யலாம்.

உடலின் பலத்தை நிா்ணயிப்பதே ரத்த தட்டுக்கள்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் அது எதிா்ப்பு சக்தியை குறைக்கும். பப்பாளி இலை ரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை சரியான அளவில் வைக்க பயன்படும். இதனால் புற்றுநோய் செல்கள் ரத்த தட்டுக்களை பாதிக்காத அளவு காக்கிறது. பப்பாளி இலை டெங்கு போன்ற உயிா் கொல்லி நோய்களையும் குணப்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களுக்கு அற்புத மருந்து பப்பாளி இலைகளில் வைட்டமின் எ,பி,சி,டி, மற்றும் ஈ ஆகிய வை அதிகம் உள்ளது. அத்துடன் ச்ப்ஹஸ்ா்ய்ா்ண்க்ள் ஹய்க் ஸ்ரீஹழ்ா்ற்ங்ய்ங்ள் போன்றவை உடலின் எதிா்ப்பு சக்திக்கு உறுதுணையாக இருக்கும். இவை அதிக ஊட்டச்சத்துகளை தந்து பிணிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பசி இன்மை போன்ற தொல்லையில் இருந்து நிரந்தர தீா்வை தரும். கா்ப்பிணி பெண்கள் இதனை தவிா்த்தல் நல்லது. இந்த பப்பாளி இலையை உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடுவது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com