ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமையல் டிப்ஸ்..

அடைக்கு  மாவு அரைக்கும்போது  ஊறவைத்த ஒரு கைப்பிடி  பச்சைப் பட்டாணியையும்  சேர்த்து  அரைத்தால்  அடை மிகவும்  ருசியாக இருக்கும்.

News image
Updated On :3 ஜூன் 2020, 2:04 pm

அடைக்கு மாவு அரைக்கும்போது ஊறவைத்த ஒரு கைப்பிடி பச்சைப் பட்டாணியையும் சேர்த்து அரைத்தால் அடை மிகவும் ருசியாக இருக்கும்.

மிளகாய் பஜ்ஜி செய்யும்போது கடலைமாவு கரைசலில் முக்கி எடுக்கும் முன்பு மிளகாயை லேசாகப் பிளந்து அதற்குள் ஓமம், உப்பு, கடலைமாவு, எண்ணெய் நான்கையும் பிசறி லேசாக ஸ்டப் செய்து பிறகு பஜ்ஜி செய்தால் பிரமாதமாக இருக்கும்.

பகளாபாத் தயாரிக்கும்போது சாதம் குழைய வெந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் சாதம் வேக வைக்கும் போதே ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு தேக்கரண்டி வீதம் அவலைச் சேர்த்து வேக வைத்தால் சாதம் நன்றாக குழைந்திருப்பதுடன் ருசியாகவும் இருக்கும்.

பீட்ரூட் அல்லது கேரட் சமைக்கும்போது கலர் மாறிவிடாமல் இருக்க சிறு துண்டு இஞ்சியைச் சேர்த்து வேகவிட்டால் கேரட், பீட்ரூட் ஆகியவை கலர் மாறாமல் இருக்கும்.

ரசத்தில் தக்காளியைப் பயன்படுத்தும்போது அதை அரிந்துப் போடாமல் கையால் பிய்த்துப் போட்டுக் கொதிக்கவிட்டால் ரசம் சுவை பிரமாதமாக இருக்கும்.

மீதமான தேங்காய்ச் சட்னியை கெட்டியானப் புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர்க் குழம்பு தயார்.

பிரெட் மீந்து விட்டதென்றால் அதனை மிக்ஸியில் இட்டுப் பொடியாக்கி உப்பு, கரம் மசாலா, கொத்துமல்லித்தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து கட்லெட்டாக எண்ணெய்யில் பொரித்தெடுக்கலாம்.

வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி, எலுமிச்சைச்சாறு சேர்த்து குலுக்கி வைத்தால் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான எண்ணெய் சேர்க்காத ஊறுகாய் ரெடி.

பொட்டுக்கடலையை நைஸாக பொடித்து வைத்துக் கொண்டால் சட்டென தேங்காய் சட்னியுடன் கலக்க, குருமா, மோர்க்குழம்பு வகையறா செய்யவும், சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.