47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

68 வயதில் 2,200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்!

ரேகா தேவ்பங்கர் எனும் 68 வயது மூதாட்டி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் வரை சுமார் 2,200 கிலோ மீட்டர் தூர பயணத்தை சைக்கிள் மூலம் மேற்கொண்டுள்ளார்.

News image
Updated On :4 நவம்பர் 2020, 12:30 am

DIN

ரேகா தேவ்பங்கர் எனும் 68 வயது மூதாட்டி, மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் வரை சுமார் 2,200 கிலோ மீட்டர் தூர பயணத்தை சைக்கிள் மூலம் மேற்கொண்டுள்ளார். இவரது இந்த துணிச்சல் மிக்க பயணத்துக்கு காரணம் பக்தி.

கடந்த ஜூலை 24-ஆம் தேதி சைக்கிள் பயணத்தைத் தொடங்கிவிட்ட இவர், தினமும் 40 கி.மீ வரை சைக்கிளில் பயணம் செய்து வருகிறார். எனவே கூடிய விரைவில் இவர் வைஷ்ணவி தேவி கோயிலை சென்றடைவார் என கூறப்படுகிறது.

ரத்தன் ஷர்டா என்பவர் ரேகா தேவ்பங்கரின் பயணம் குறித்த பதிவை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கி விட்ட நிலையில் வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை இந்த மூதாட்டி நிரூபித்து விட்டார் என்று அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதே நேரத்தில் அவரது பாதுகாப்பு தொடர்பாகவும் ஒரு சிலர் சமூக வலை தளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.