எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தன்னந்தனியாக ஒரு மூதாட்டி

உலகின்  பல நகரங்களில்  ஜனத்தொகை  பிதுங்கி   வழிகிறது.  ஆனால்,  அமெரிக்காவில்  உள்ள   ஒரு நகரில்,  ஒரே ஒரு  மூதாட்டி  மட்டும் வசித்து வருகிறார்.

News image
Updated On :7 அக்டோபர் 2020, 12:30 am

ஆ. கோ​லப்​பன்


உலகின் பல நகரங்களில் ஜனத்தொகை பிதுங்கி வழிகிறது. ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில், ஒரே ஒரு மூதாட்டி மட்டும் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் அந்நாட்டு மக்களுடன், பிறநாட்டவரும் அதிகம் குடியேறியுள்ளனர். அவர்களில் பலரும் நாளடைவில் அமெரிக்காவின் நிரந்தர வசிப்புரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் நெப்ராஸ்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் எல்சி எய்லர் என்ற 84 வயது மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து
வருகிறார்.
மக்கள் இல்லாத இடத்தில் ஒருவர் மட்டும், அதுவும் வயதான மூதாட்டி எப்படி தனியாக வசிக்கிறார்? அதற்கு எல்சி எய்லர் பதில் கூறுகிறார்:
""இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தைத் தாண்டி உள்ள விவசாய நிலப் பகுதியில் பணிகளை மேற்கொண்டு, வந்தனர். அவர்களுக்குப் பின் நான் இங்கேயே வசிக்க விரும்பினேன். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்தாலும், மோனோவியிலேயே இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர்.
நான் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல், காப்பி, டீ போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்தக் கடையைத் திறந்தபோது, இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகைக்கடையும் மூடப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது எனது கடையின் வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர். அதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக, எந்தவித போட்டியுமின்றி இந்தப் பகுதியின் மேயராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்'' என்கிறார் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வசித்தும் வரும் இந்த மூதாட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.